திருப்பதி ரயில் நிலைய பணிமனையில் பத்மாவதி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

திருமலை: திருப்பதி பணிமனையில் பத்மாவதி ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதி பணிமனையில் நேற்று மாலை திடீரென தடம் புரண்டது. இதனால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரயிலின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. அதில் திருப்பதியில் இருந்து நேற்று மாலை 4.55 மணிக்கு புறப்பட வேண்டிய பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.45க்கு மாற்றி அமைக்கப்பட்டு புறப்பட்டு சென்றது.

அதேபோல் திருப்பதி நிஜாமுதீன் செல்லும் ராயல்சீமா எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராயலசீமா எக்ஸ்பிரஸ் இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயில் தடம்புரண்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருப்பதி ரயில் நிலைய பணிமனையில் பத்மாவதி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: