சென்னையில் மீண்டும் எகிறியது தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி..!

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அந்த வகையில் கடந்த 11ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,856க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. அதாவது, 12ம் தேதி ஒரு சவரன் ரூ.44,000, 13ம் தேதி ரூ.44,296, 14ம் தேதி ரூ.44,360க்கும் விற்கப்பட்டது. 15ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,550க்கும், சவரன் ரூ.44,400க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 அளவுக்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.5,536க்கும், சவரன் ரூ.44,288க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து 5,550க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.81.40-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

The post சென்னையில் மீண்டும் எகிறியது தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி..! appeared first on Dinakaran.

Related Stories: