மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு

சங்கராபுரம், ஜூலை 15: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் நடராஜன் (43), கொத்தனார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த சீலிங் பேனை நடராஜன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நடராஜனை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லட்சுமணன் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜனுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு appeared first on Dinakaran.

Related Stories: