புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஒப்புதல் அளித்துள்ளனர். இறுதி தீர்ப்புக்கு வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.