காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் தளபதி முருகேசன் சந்திப்பு

 

சூலூர், ஜூலை 13:கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 5ம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் நேற்று சந்தித்து பேசினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைகள் குறித்து எடுத்துச் சொல்லி, ஆவண செய்வதாக எடுத்துக் கூறினார். இந்த சந்திப்பின் போது சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், வாரப்பட்டி தரமராஜ், இந்து சமய அறநிலையத்துறை உறுப்பினர் சிபி.செந்தில்குமார், கலங்கல் சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் தளபதி முருகேசன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: