இதையடுத்து இன்று காலை 7.45 மணி அளவில் வடக்கு காமராஜர் நகர் பகுதியில் கூடங்குளம்- ராதாபுரம் மெயின் ரோட்டில் சுமார் 50 பெண்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். வேண்டும், வேண்டும், குடி தண்ணீர் வேண்டும், சப்ளை செய், சப்ளை செய், அத்தியாவசிய குடிநீரை ஒழுங்காக சப்ளை செய் என்று கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த கூடங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் வின்சி மணியரசு, எஸ்ஐ வினுகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 4 நாட்களுக்குள் குடிநீரை வழங்குவோம் என்று பஞ்., தலைவர் வின்சி மணியரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டத்தை பெண்கள் வாபஸ் பெற்று, கலைந்து சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் நடந்த மறியலால் வள்ளியூர்- கூடங்குளம் சாலை போக்குவரத்தும், கூடங்குளம்- நெல்லை சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. மறியல் வாபசானதைத் தொடர்நது மீண்டும் இந்த இரு ரோடுகளிலும் போக்குவரத்து சீரானது.
The post 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை கூடங்குளத்தில் பெண்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
