இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையுண்ட அம்பிகாவிற்கும், ஏழுமலைக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்பிகாவை கொலை செய்ய ஏழுமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 4ம் தேதி இரவு அம்பிகாவை பார்க்க வந்த ஏழுமலை, அவருக்கு போன் செய்து உல்லாசமாக இருப்பதற்காக வெளியே வரும்படி அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டில் இருந்து வந்த அம்பிகாவை, ஏழுமலை மற்றும் அவரது நண்பர்களான நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி(23), பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரது புடவையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கூட்டு பலாத்காரம் செய்து பெண் படுகொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.