பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பராசக்தி திரைப்படம் எல்இடி திரையில் வெளியீடு: எம்எல்ஏ, திமுகவினர் பங்கேற்பு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் கதை வசனத்தால் வரலாற்றில் சாதனை படைத்த பராசக்தி திரைப்படத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் எல்இடி திரை மூலம் திரையிடும் நிகழ்ச்சி சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், வரலாற்றில் கதைக்காகவும், கதை வசனத்திற்காகவும் நீண்ட நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம் பராசக்தி, இன்றளவும்கூட இந்த படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக திகழ்கிறது.

கதை வசனத்திற்காகவும் திரைக்கதைக்காகவும் ரசிகர் கூட்டம் இருப்பது என்றால், கலைஞருக்கு மட்டும்தான்” என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வானவேடிக்கையுடன் பராசக்தி படம் திரையிடப்பட்டது.நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவராமன், நிர்வாகிகள் கார்த்தி, ரவி, பாலமுருகன், பாண்டியன், நந்தா உள்ளிட்ட கழக முன்னோடிகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

The post பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பராசக்தி திரைப்படம் எல்இடி திரையில் வெளியீடு: எம்எல்ஏ, திமுகவினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: