கூடலூர் பஸ் நிலைய சாலையில் மழைநீர் தேக்கம்

கூடலூர், ஜூலை 9: கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலைய பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க முடியாத சூழல் இருந்து வந்தது.இந்நிலை, தற்போது மழைக்காலம் துவங்கியதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக நடந்து செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பள்ளங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் பஸ் நிலைய சாலையில் மழைநீர் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: