திங்கள்சந்தை, ஜூலை 7: செருப்பங்கோடு ஊசிக்காட்டு சிவ சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவில் நேற்று (6ம் தேதி) காலை கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு வருஷாபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து சிற்றுண்டி, நவீன வில்லிசை, இரவு 12.10க்கு சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. இரண்டாம் நாள் விழாவான இன்று காலை 9.30 மணிக்கு செருப்பங்கோடு முத்தாரம்மன் கோவிலில் இருந்து சுருள் எடுத்துக்கொண்டு ராமர் கோவில் வழியாக செருப்பங்கோடு சிவ சுடலை மாடசுவாமி கோவில் சென்றடைதல். காலை 10 மணிக்கு பிரம்மசக்தி அம்மன் கதை வில்லிசை, மதியம் 12.30க்கு சிறப்பு அலங்கார பூஜை, 1 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு நாதஸ்வரம், தொடர்ந்து சிவ சுடலைமாட சுவாமி கதை வில்லிசை, இரவு 12 மணிக்கு சிவ சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் (8-ம் தேதி) சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
The post செருப்பங்கோடு சிவ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா appeared first on Dinakaran.