சோழிங்கநல்லூர் மற்றும் செங்குன்றத்தில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு

சென்னை: கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 117வது கிளை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலும், 118வது கிளை சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூரிலும் திறக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் புதிய கிளைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, விழாவில் பங்கேற்றவர்களை வரவேற்று, நிதி நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தற்போதைய சிறப்பான செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார்.

நிறுவனத்தின் துணை தலைவர் எஸ்.ராமலிங்கம், மேலாண் இயக்குனர் பி.ஆர்.பி.வேலப்பன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், நிறுவனத்தின் இயக்குனருமான ஜி.அன்பழகன் மற்றும் இயக்குநர்கள் எஸ்.ஹரிஹரன், பி.பிரகாசம், ஜி.துரைராஜ், இ.அம்பிகா, எம்.குருபிரசாந்த், நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிதியின் பங்குதாரர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

The post சோழிங்கநல்லூர் மற்றும் செங்குன்றத்தில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: