அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே, கிறிஸ் சோல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7.5 ஓவரில் 37 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. கடுமையாகப் போராடிய சிக்கந்தர் 34 ரன், வெஸ்லி 40 ரன், ரயன் பர்ல் 83 ரன் (84 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். ஜிம்பாப்வே 41.1 ஓவரில் 203 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து பந்துவீச்சில் கிறிஸ் சோல் 3, மெக்கல்லன், லீஸ்க் தலா 2, ஷரிப், வாட், கிரீவ்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கிறிஸ் சோல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 31 ரன் வித்தியாசத்தில் வென்ற ஸ்காட்லாந்து அணி உலக கோப்பை பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்த நிலையில், ஜிம்பாப்வே அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. ஸ்காட்லாந்து தனது கடைசி சூப்பர் 6 லீக் ஆட்டத்தில் நாளை நெதர்லாந்து அணியை சந்திக்கிறது.
The post 31 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து appeared first on Dinakaran.