பள்ளி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் கோயில் தெருவை சேர்ந்த வரதராஜன் மகள் பிரவீனா (16). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரவீனா தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியேவராதாதல் அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பிரவீனா துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: