மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு காங். அனுமதிக்காது: கே.எஸ்.அழகிரி

சென்னை: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறிவிட்டதால் மேகதாது அணையை கட்டிவிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காங்., கூட்டணி கட்சிகள் ஒருபோதும் அதை அனுமதிக்காது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற பழக்கத்தை தான் அண்ணாமலை செய்கிறார். மேகதாது விவகாரத்தில் அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார் எனவும் குற்றம் சாடினார்.

The post மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு காங். அனுமதிக்காது: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Related Stories: