அன்னை பூமியை காக்கும் பணிகளுக்கு முனைவர் இறையன்பு துணை நிற்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ்

சென்னை : அன்னை பூமியை காக்கும் பணிகளுக்கு முனைவர் இறையன்பு துணை நிற்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாக பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர் இறையன்பு. தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்ததுடன், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு காரணமாக இருந்தார். புவிவெப்பமயமாதல் என்ற பெருந்தீமை அன்னை பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அன்னை பூமியை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வதிலும், அதற்கான களப் பணிகளிலும் #பசுமைத்தாயகம் அமைப்புடன் இணைந்து செயல்பட முனைவர் இறையன்பு அவர்களை அழைக்கிறேன்; அழைப்பை ஏற்று அவர் முன்வர வேண்டும். ” என்று பதிவிட்டுள்ளார்.

The post அன்னை பூமியை காக்கும் பணிகளுக்கு முனைவர் இறையன்பு துணை நிற்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: