உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால், சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு மண்டல தலைவராகவும், உளவுத்துறை ஐஜியாகவும் இருந்தவர் சங்கர் ஜிவால். 2007-ல் சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கமும், 2019-ல் குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார். 2004 முதல் 2006 வரை தென்மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
The post தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு: சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் appeared first on Dinakaran.