அதன் பின்னர் பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஒருவழி பாதையாக வண்டலூரிலிருந்து தாம்பரம் வரக்கூடிய மேம்பாலபாதை மட்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது பாதையான பெருங்களத்தூரிலிருந்து, சீனிவாசராகவ நகர் பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பால பணியானது கடந்த மாதம் முடிக்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. இதன் காரணமாக மேம்பாலத்தை விரைவில் திறக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று திறந்து வைத்தார்.
The post சென்னை பெருங்களத்தூர் – பீர்க்கன்காரணையை இணைக்கும் மேம்பாலத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.