சுதர்சன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

புதுக்கோட்டை: ஒன்பதாம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் பயன்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச யோகா தினம் புதுக்கோட்டை சுதர்சன் பொறியியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. நிகழ்வினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியை சஹானா துவக்கி வைத்தார். உபயோகவில் கைப் பயிற்சி கழுத்து பயிற்சி, நாடி சுத்தி மற்றும் யோக நமஸ்காரம் ஆகியவற்றை ஈஷா யோகா மையத்தின் மூலம் ஆசிரியர் பயிற்சியை முடித்த நமது கல்லூரியின் இயந்திரவியல் பொறியியல் துறையில் உதவி பேராசிரியர் குணசேகர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் இத்தினத்தை முன்னிட்டு புகைப்பட போட்டி நடத்தப்பட்டு அதில் மாணவர்கள் இரண்டு முதல் ஐந்து யோகாசனங்களை செய்து அப்புகைப்படத்தை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது . அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் னிவாசன் பாராட்டினார்.

The post சுதர்சன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: