மெட்ரோ ரயில் நிலையங்களில் 500 பேட்டரி ஆட்டோ வசதி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் 500 பேட்டரி ஆட்டோ வசதி ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தனியார் அமைப்புகளுடன் இணைந்து 40 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், 60 பேட்டரி ஆட்டோக்களை இயக்க உள்ளோம். வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 500 பேட்டரி ஆட்டோக்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மெட்ரோ ரயில் நிலையங்களில் 500 பேட்டரி ஆட்டோ வசதி appeared first on Dinakaran.

Related Stories: