விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே கருமாபுரத்தில் சக்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், தீபாராதனை, காவிரிக்கு சென்று புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை, 2ம் கால யாகபூஜை, யாத்ராதானம் உள்ளிட்டவையும், காலை 9.45 மணிக்கு சக்தி விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து, கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். கும்பாபிஷேகத்தை ராஜா குருக்கள் நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: