கூலித்தொழிலாளி தற்கொலை

 

தேவதானப்பட்டி, ஜூன் 26: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் சிந்துவம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேஷ்(42). இவர் மனைவி ராஜாத்தி(37). இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சுரேஷ் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜாத்தி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கூலித்தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: