வி.பி.சிங் சிந்தனைகள் நம்மை வழி நடத்தட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி சிங் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன்.

சமூகநீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் ‘இட ஒதுக்கீடு எங்கள் உரிமை’ என ஓங்கி முழங்கச் செய்தவர். வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி. சிங், தலைவர் கலைஞர் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள். வி.பி. சிங் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

The post வி.பி.சிங் சிந்தனைகள் நம்மை வழி நடத்தட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: