கூடுதல் கலெக்டர் வீட்டில் ரெய்டு: மொட்டை மாடியில் வீசப்பட்ட ரூ3 கோடி ரொக்கம் சிக்கியது

புவனேஷ்வர் : ஒடிசா மாநிலம் நபாரங்பூர் மாவட்டத்தில் கூடுதல் துணை கலெக்டராக இருப்பவர் பிரசாந்தா குமார் ராவத். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்தன. இதையடுத்து அவருக்கு சொந்தமான 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிலும் சோதனை நடந்தது.

புவனேஸ்வரில் உள்ள பிரசாந்தா குமார் ராவத் வீட்டில் அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது அவரது மனைவி வீட்டில் இருந்து 6 அட்டை பெட்டிகளை பக்கத்து வீட்டு மாடியில் வீசி எறிந்தார். அதை எடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே கொண்டு சென்றனர். அங்கு சென்று சோதனை நடத்தி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். ரூ.500 நோட்டு கட்டுகளாக ரூ.2.25 கோடி அங்கு இருந்து மீட்கப்பட்டது. மேலும் நாபரங்பூர் வீட்டில் இருந்து ரூ.89.5லட்சம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post கூடுதல் கலெக்டர் வீட்டில் ரெய்டு: மொட்டை மாடியில் வீசப்பட்ட ரூ3 கோடி ரொக்கம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: