நொய்யலில் செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து செல்லாண்டியம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லாண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post நொய்யலில் செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை appeared first on Dinakaran.

Related Stories: