மீஞ்சூரில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்: விவேகானந்தா பள்ளி தாளாளர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன் பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள ஸ்ரீமதி கங்காதேவி பஜ்ரங்லால் சொக்கானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சூர்யா நகரில் ஸ்ரீமதி கங்காதேவி பஜ்ரங் லால் சொக்கானி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, நேற்று ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது. தலைவர் மன்திப், திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மகேஷ்வரி, வல்லூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ஆர். ஸ்ரீராம், பள்ளி முதல்வர் கலைவாணி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூரில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம்: விவேகானந்தா பள்ளி தாளாளர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: