காரை விஷ்ணுராம் ஓட்டியுள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது, திடீரென கார் விஷ்ணுராமின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் கார், சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த விஷ்ணுராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் தீபன்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தீபனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் உயிரிழந்த விஷ்ணுராம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு ெசய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post சைதாப்பேட்டை அருகே அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மரத்தில் மோதி தொழிலதிபர் பலி: நண்பர் சீரியஸ் appeared first on Dinakaran.
