தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு முகாம்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி ஆர்சி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், \”என் குப்பை என் பொறுப்பு\” தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மக்கும் குப்பை -மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் பரிசு வழங்கினார். மேலும், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மோனிகா, துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: