திருப்பூர் நீதிமன்றத்தில் யோகா தின விழா

 

திருப்பூர், ஜூன் 22: திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்ட நீதித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் சர்வதேச யோகா தின விழா, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் வரவேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை வகித்தார்.

இதில் சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் டாக்டர் கணேசன் ஆகியோர் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசி, அனைவருக்கும் யோகா பயிற்சிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விரைவு மகிளா நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி குமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, நீதித்துறை நடுவர் பாரதி பிரபா மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள் ரகுபதி, சுந்தரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

The post திருப்பூர் நீதிமன்றத்தில் யோகா தின விழா appeared first on Dinakaran.

Related Stories: