தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் பணிநிறைவு பெற்றதையொட்டி புதிய மாநிலத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாநிலத் தேர்தல் அலுவலர் அருணகிரி நாதன் தலைமையிலும், துணைத் தேர்தல் அலுவலர்கள் கார்த்திகேயன் மற்றும் முத்து ரமேஷ் ஆகியோர் முன்னிலையிலும் திருவல்லிக்கேணி, ஒன்றிய தலைமையகமான சிவ.இளங்கோ இல்லத்தில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாநிலத் தலைவர் பதவிக்கு பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் அமிர்தகுமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், குத்தாலம் வட்டாரத்தில், வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

The post தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: