ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி..!!

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரில் எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை எகிப்து அணி வென்றது. சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. மலேசிய அணியை 4 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை எகிப்து தட்டிச் சென்றது. கடந்த 13-ம் தேதி முதல் நடைபெற்ற போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்றன. ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் மலேசியா 2வது இடம், இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 3ஆம் இடம் பிடித்தன.

The post ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எகிப்து அணி..!! appeared first on Dinakaran.

Related Stories: