எனவே அங்காடி நிர்வாக சார்பில், சாலையோர கடைகளை எடுக்கும்படி பலமுறை கூறியும் வியாபாரிகள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வியாபாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், அங்காடி நிர்வாகம் சார்பில், சென்டர் மீடியனில், விதவிதமாக அழகான செடிகளை அமைத்து, அவற்றை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி அழகாக காணப்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. இதுகுறித்து, அங்காடி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமை பரப்பாக மாற்றும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இன்னும் 1,000 செடிகளை நடும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை பசுமையாக மாற்ற 2,500 செடிகள்: அங்காடி நிர்வாகம் ஏற்பாடு appeared first on Dinakaran.
