ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி, ‘‘இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை தேவை’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் ,‘‘ பாஜ அறிவித்த உறுதிமொழிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னர் பிரித்தாளும் சூழ்ச்சியாகும்’’ என்றார். சமாஜ்வாடி எம்பி ஷபீக்வூர் ரஹ்மான் கூறுகையில்,‘‘ இது நாட்டில் வெறுப்புணர்வை அதிகரிக்க செய்யும்’’ என்றார்.
வாக்கு வங்கி அரசியல்
பாஜ செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனாவாலா கூறுகையில், ‘‘அடிப்படைவாத அழுத்தங்களும், வாக்கு வங்கி அரசியலாலும் காங்கிரஸ் இதை எதிர்க்கிறது’’ என்றார்.
The post தேர்தல் தோல்வியை திசை திருப்பவே பொதுசிவில் சட்ட கருத்து கேட்பு: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
