இதனால், ஆத்திரமடைந்த அஸ்வின், அருகில் இருந்த பெரிய உருட்டுக்கட்டையை எடுத்து, ராம்பாபு தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கு இருந்து தப்பியுள்ளார். படுகாயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். காரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்பாபு சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், தலைமறைவாக இருந்த அஸ்வினை நேற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர். ஓசியில் ஐஸ் தர மறுத்த வியாபாரி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post ஓசியில் ஐஸ் தர மறுத்ததால் ஆத்திரம் குல்பி ஐஸ் வியாபாரி அடித்துக்கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.