இம்ரான் கான் கைதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்களும், இம்ரான் கான் ஆதரவாளர்களும் நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டனர். லாகூரில் உள்ள ராணுவ தளபதி வீடு மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் வீடுகளும் சூறையாடப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்க பாகிஸ்தான் அமைச்சரவை மே 20ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இம்ரான் கான் மீதான சட்ட நடவடிக்கைகள் அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொடங்கும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா கூறியுள்ளார்.
The post இம்ரான் கானுக்கு எதிராக 3 வாரத்தில் சட்ட நடவடிக்கை: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.
