நடிகர் சிரஞ்சீவியின் அண்ணன் மகன் நடிகர் வருண்தேஜ்-நடிகை லாவண்யா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் நடந்தது

திருமலை: தெலுங்கு நடிகர் வருண்தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. தெலுங்கு திரைப்பட மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபு. இவரது மகன் நடிகர் வருண்தேஜ். தெலுங்கு பட நடிகை லாவண்யா திரிபாதி. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று மாலை நாகபாபு வீட்டில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிரஞ்சீவி, பவன்கல்யாண், அல்லு அர்ஜுன், குடும்பத்தினர், லாவண்யா திரிபாதி குடும்பத்தினர் மட்டும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மிஸ்டர் படத்தில் வருணும், லாவண்யாவும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். இப்படத்தின் மூலம்தான் அவர்களுக்குள் நட்பு உருவானது. அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அதிஷ்கம் படத்தில் இணைந்து நடித்தனர். அன்று முதல் இவர்களின் நட்பு காதலாக மாறியது. ஆனால் நீண்ட நாட்களாக இருவரும் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். வருண்தேஜ் தற்போது காந்திவதாரி அர்ஜுனா படத்தில் நடித்து வருகிறார். வருண்தேஜ் ஜோடியாக சாக்ஷி வைத்யா நடிக்கும் இப்படத்தை பிரவீன் சத்தாரு இயக்குகிறார். இதனுடன் புதிய இயக்குனரை வைத்து ஏர்போர்ஸ் கான்செப்ட் படத்தில் நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி சமீபத்தில் புலிமேகா என்ற வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

The post நடிகர் சிரஞ்சீவியின் அண்ணன் மகன் நடிகர் வருண்தேஜ்-நடிகை லாவண்யா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: