கோட்டயத்தில் புதிய கலெக்டராக மதுரையை சேர்ந்தவர் பொறுப்பேற்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய கலெக்டராக விக்னேஷ்வரி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரையைச் சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

இதற்கு முன் இவர் கேரள கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர், சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரது கணவர் உமேஷும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மதுரையை சேர்ந்த உமேஷ் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோட்டயத்தில் புதிய கலெக்டராக மதுரையை சேர்ந்தவர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: