ராசிபுரம், ஜூன் 10: நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், பாலப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், ராசிபுரம் உட்கோட்டத்தில் குருசாமிபாளையம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோட்டப்பொறியாளர் திருகுணா, ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக்கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார் மற்றும் உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ராசிபுரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.