நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும்: எஸ்பிஐ ஆய்வறிக்கை தகவல்

கொல்கத்தா: நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி உறுதியான நிலையில் இருப்பதாகவும், அதன் வளர்ச்சி கடந்தாண்டு இருந்த 6.4 சதவீதத்தில் இருந்து சற்று உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், சற்று உயர்ந்திருப்பதாக கடந்த 8ம் தேதி நடந்து முடிந்த நாணய கொள்கை குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.1 ஆக இருக்கும் என்று எஸ்பிஐ கணித்திருக்கிறது. சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் விளைவாக வேலைவாய்ப்பு சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும்: எஸ்பிஐ ஆய்வறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: