சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வந்தவாசி அருகே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி

திருவண்ணாமலை, ஜூன் 10: வந்தவாசி அருகே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் இஸ்மாயில் மகன் இலியாஸ்(20). இவர், வந்தவாசி பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பேஸ்புக் மூலம் நடப்பு ஏற்படுத்தியுள்ளார். மேலும், பேஸ்புக் மூலம் தொடர்ந்து நட்பு வளர்த்து, அந்த சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். பின்னர், செல்போன் எண்ணில் ெதாடர்பு கொண்டு பேசிய வாலிபர் இலியாஸ், அந்த சிறுமிக்கு பரிசு பொருள் தருவதாக ஏமாற்றி வந்தவாசி பகுதிக்கு கடந்த 26.7.2020 அன்று வரவழைத்துள்ளார். அப்போது, அவரது நண்பர்களான பர்கத்(21), சூர்யா(20) ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

தனக்கு நடக்கப்போகும் ெகாடூரத்தை அறியாத அந்த சிறுமியும், இலியாஸ் தெரிவித்த இடத்துக்கு வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் இலியாஸ் ஈடுபட்டுள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்நிலையில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் வந்தவாசி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இலியாஸ், பர்கத், சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலியாஸ், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், ₹5 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பர்கத், சூர்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த இலியாசை, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வந்தவாசி அருகே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுத்தி appeared first on Dinakaran.

Related Stories: