காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு வட்டம் வாரியாக ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடக்கிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் வட்டத்தில் கிளார், உத்திரமேரூர் வட்டத்தில் பென்னலூர், வாலாஜாபாத் வட்டத்தில் ஏகனாம்பேட்டை, பெரும்புதூர் வட்டத்தில் வல்லக்கோட்டை, குன்றத்தூர் வட்டத்தில் எழிச்சூர் ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
The post வட்டம் வாரியாக நாளை ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.