காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பைக்கில் கடத்திய 400 மதுபாட்டில் பறிமுதல்

*போலீசார் அதிரடி

நாகப்பட்டினம் : காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பைக்கில் கடத்திய 400 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் நாகூர் அருகே முட்டம் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 90 மில்லி அளவு கொண்ட 400 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் ெசல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (34) என்பதும், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிரசாந்தை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி ஹர்ஷ்சிங் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பைக்கில் கடத்திய 400 மதுபாட்டில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: