நேற்று அதிகாலை 2 மணி அளவில் தொழிலதிபரின் படுக்கை அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த அவர், தனது குடும்பத்தினரை உடனே வெளியேற்றினார். அதற்குள் தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. தகவலறிந்த தி.நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில், தேனாம்பேட்டை, அசோக் நகர் பகுதியில் இருந்து 15 தீயணைப்பு வீரர்களுடன் விபத்து நடந்த வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 500 சதுரஅடி கொண்ட படுக்கை அறையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஏசியில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
The post ஏ.சி.யில் மின் கசிவு காரணமாக தொழிலதிபர் வீட்டில் தீ விபத்து: குடும்பத்துடன் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.