இதில், தூக்கி வீசப்பட்டு, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ராமலிங்கம், மனைவி சடலத்தை பார்த்து கதறி அழுதார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அரசு பேருந்து ஓட்டுனர் பழனியை (47) கைது செய்தனர்.
The post பைக் மீது பேருந்து மோதி கணவன் கண் எதிரே மனைவி பரிதாப பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.