இது தொடர்பாக சீனிவாசன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (27), சஞ்சய் (20), வேலன் (18) ஆகிய 3 பேரும் இந்த செயலில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹1,500 மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் வேலன், கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
The post லிப்ட் கொடுப்பதுபோல் நடித்து வழிப்பறி கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.