இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த வெங்கடேச பெருமாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரியதர்ஷினியை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post சமைக்கவில்லை என கணவன் கண்டித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை appeared first on Dinakaran.