நேற்று காலை தனி அறையில் தங்கியிருந்த ரகுநாதன், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் ரகுநாதன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த ரகுநாதனுக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.
The post கொல்லிமலை சென்ற சென்னை தொழிலதிபர் விடுதியில் மர்ம சாவு appeared first on Dinakaran.