அபிஷேக் பானர்ஜியின் மனைவி அமலாக்கத்துறையில் ஆஜர்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா மீது பல ஆயிரம்கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. திங்களன்று கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட்ட அபிஷேக் மனைவி ருஜிரா மற்றும் குழந்தைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ருஜிரா கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

The post அபிஷேக் பானர்ஜியின் மனைவி அமலாக்கத்துறையில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: