அவரது ஆவணங்களை சோதனை செய்ததில் அவர் கணவர் இறந்துவிட்டதாக பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் 13 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், அவரது கணவர் பிஜய் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விபத்து நிகழ்ந்த பாலசோர் மாவட்டத்தில் பஹாநகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை போலியாக உரிமை கொண்டாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே மற்றும் ஒடிசா போலீசாருக்கு தலைமை செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
The post ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக பொய் கூறி இழப்பீடு தொகையை மோசடி செய்ய பெண் முயற்சி: பிரிந்து வாழும் கணவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.