தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2013-2014ம் ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 6 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது 135 சதவீத அதிகரிப்பாகும். இதேபோல் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது அதாவது 4.7கோடியில் இருந்து 7 கோடியாக உயர்ந்துள்ளது. விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் மிதக்கும் விமானதளங்களின் எண்ணிக்கையானது அடுத்த 5 ஆண்டுகளில் 200 ஆக அதிகரிக்கும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 1200 முதல் 1400 விமானங்கள் வாங்குவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
The post அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி appeared first on Dinakaran.