(வேலூர்) நாதக பொதுக்கூட்டம் கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், ஜூன் 7: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூர் பஸ் நிலையம்‌ டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காடு வளம், நீர் வளம், மண் வளம், சுற்றுசூழல் மாசுபடுதல் குறித்து பேசப்பட்டது. இதனை தொடர்ந்து குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பேச்சாளர் சல்மான் கலந்து கொண்டு பேசினார்.

The post (வேலூர்) நாதக பொதுக்கூட்டம் கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: